Monday, 25 August 2014

நமது உடலை பற்றி தெரிந்ததும் தெரியாததும்.






* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.

* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.

* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.

* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.

* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.

* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.

* நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.

* நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.

* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.

* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.

* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.

* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.

* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது

.* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை.


Saturday, 9 August 2014

சர்க்கரை நோயும் உணவு பழக்கமும்


 சமுதாயத்தில் உணவு பழக்கம் மாற வேண்டும்.


தானிய உணவை குறைத்தால் மட்டுமே சர்க்கரை நோயை வெல்ல முடியும்.


சர்க்கரை என்று நாம் குறிப்பிடுவது சீனி, அஸ்கா,சர்க்கரை அல்ல.கார்போஹைட்ரேட் என்று சொல்லக் கூடிய மாவுச்சத்து தான்.

உதாரணம்: இட்லி,தோசை,சப்பாத்தி போன்றவற்றில் இருக்கும் தானியங்களான அரிசி,ராகி,கோதுமை,கம்பு,சோளம் இவற்றில் உள்ள மாவுச்சத்தை தான் நாம் சர்க்கரை என்று கூறுகிறோம்,இந்த மாவுச்சத்துதான் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது.


தனியாக தானிய உணவு எதை சாப்பிட்டாலும் சர்க்கரையாக மாறும்.தானிய உணவு ஜீரணமாகி சக்தியாகி  மாறவும் இன்சுலின் அவசியம்.தானியம் மட்டும் சாப்பிட்டால் இன்சுலின்  அதிகமாக சுரக்கும். சர்க்கரை அதிகமாகும்.வேகமாக ஜீரணமாகும் உணவுகளான கஞ்சி,களி,கோதுமை தோசை போன்றவை சர்க்கரையை இரத்தத்தில் மிக வேகமாக அதிகப்படுத்தும்.மூன்று வேளையும் தானியமாக  சாப்பிட்டால் சர்க்கரை அதிகமாகும்.


உதாரணத்திற்கு, இந்தியாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் தானிய உணவை அதிகமாக சாப்பிடுகிறோம்.சர்க்கரை இல்லாதவர்கள் கூட தானியங்களை அதிகமாக சாப்பிடும் போது இன்சுலின் சுரப்பும்,இன்சுலின் தேவையும் அதிகமாகும்.எதிர்காலத்தில் சர்க்கரை வரும் வாய்ப்பு உள்ளது. தானிய உணவை 3 ல் ஒரு பங்கு குறைத்து பருப்பு,பயறு,பழங்கள்,காய்கறிகள் சாப்பிட வேண்டும்.


இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்த சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவில் சிறிது மாற்றம் செய்தாலே போதும்..


இதுவரைக்கும் நம் வீட்டு இட்லிக்கு,மாவரைக்கும் போது,அரிசி அதிகமாகவும்,உளுந்து குறைவாகவும் போட்டிருப்போம்.இனிமேல் மாவு ஆட்டும் போது உளுந்து வெந்தயம் அதிகப்படுத்தி அரிசியை குறைக்கவும்.


சப்பாத்தியில் இனி கோதுமை அளவைக் குறைத்து பருப்பு அல்லது சோயா மாவு சேர்ககவும்.


பொங்கள் செய்யும் போது பாசி பருப்பை அதிகப்படுத்தி,அரிசியைக் குறைக்கவும்.


மதியம் நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் சாதத்தை குறைத்து பருப்பு காய்கறி அதிகம் சேர்த்து சாப்பிடவும்.