Monday, 25 August 2014

நமது உடலை பற்றி தெரிந்ததும் தெரியாததும்.






* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.

* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.

* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.

* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.

* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.

* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.

* நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.

* நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.

* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.

* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.

* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.

* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.

* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது

.* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை.


Saturday, 9 August 2014

சர்க்கரை நோயும் உணவு பழக்கமும்


 சமுதாயத்தில் உணவு பழக்கம் மாற வேண்டும்.


தானிய உணவை குறைத்தால் மட்டுமே சர்க்கரை நோயை வெல்ல முடியும்.


சர்க்கரை என்று நாம் குறிப்பிடுவது சீனி, அஸ்கா,சர்க்கரை அல்ல.கார்போஹைட்ரேட் என்று சொல்லக் கூடிய மாவுச்சத்து தான்.

உதாரணம்: இட்லி,தோசை,சப்பாத்தி போன்றவற்றில் இருக்கும் தானியங்களான அரிசி,ராகி,கோதுமை,கம்பு,சோளம் இவற்றில் உள்ள மாவுச்சத்தை தான் நாம் சர்க்கரை என்று கூறுகிறோம்,இந்த மாவுச்சத்துதான் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது.


தனியாக தானிய உணவு எதை சாப்பிட்டாலும் சர்க்கரையாக மாறும்.தானிய உணவு ஜீரணமாகி சக்தியாகி  மாறவும் இன்சுலின் அவசியம்.தானியம் மட்டும் சாப்பிட்டால் இன்சுலின்  அதிகமாக சுரக்கும். சர்க்கரை அதிகமாகும்.வேகமாக ஜீரணமாகும் உணவுகளான கஞ்சி,களி,கோதுமை தோசை போன்றவை சர்க்கரையை இரத்தத்தில் மிக வேகமாக அதிகப்படுத்தும்.மூன்று வேளையும் தானியமாக  சாப்பிட்டால் சர்க்கரை அதிகமாகும்.


உதாரணத்திற்கு, இந்தியாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் தானிய உணவை அதிகமாக சாப்பிடுகிறோம்.சர்க்கரை இல்லாதவர்கள் கூட தானியங்களை அதிகமாக சாப்பிடும் போது இன்சுலின் சுரப்பும்,இன்சுலின் தேவையும் அதிகமாகும்.எதிர்காலத்தில் சர்க்கரை வரும் வாய்ப்பு உள்ளது. தானிய உணவை 3 ல் ஒரு பங்கு குறைத்து பருப்பு,பயறு,பழங்கள்,காய்கறிகள் சாப்பிட வேண்டும்.


இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்த சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவில் சிறிது மாற்றம் செய்தாலே போதும்..


இதுவரைக்கும் நம் வீட்டு இட்லிக்கு,மாவரைக்கும் போது,அரிசி அதிகமாகவும்,உளுந்து குறைவாகவும் போட்டிருப்போம்.இனிமேல் மாவு ஆட்டும் போது உளுந்து வெந்தயம் அதிகப்படுத்தி அரிசியை குறைக்கவும்.


சப்பாத்தியில் இனி கோதுமை அளவைக் குறைத்து பருப்பு அல்லது சோயா மாவு சேர்ககவும்.


பொங்கள் செய்யும் போது பாசி பருப்பை அதிகப்படுத்தி,அரிசியைக் குறைக்கவும்.


மதியம் நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் சாதத்தை குறைத்து பருப்பு காய்கறி அதிகம் சேர்த்து சாப்பிடவும்.

Sunday, 27 July 2014

சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?




 சர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து  சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
சரியான முறையில் சாப்பிடுவதன் மூலம் உணவின் சர்க்கரைப் பொருள் சரியாக ஜீரணிக்கப்பட்டு தேவையான இன்சுலினை பெற்று உடலால்ஏற்றுக்கொள்ளப்படும்.தவறான உணவுப்பழக்கத்தாலே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

நாம் உண்ணும் உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும்.   அரிசி, கோதுமை ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகம் இருந்தாலும் கோதுமை மற்றும் தவிடு நீக்காத அரிசியில் அதிக அளவு உள்ள நார்சத்து  (fibre content)  சக்கரையின் அளவு  இரத்தத்தில் ஒரே சீராக சேரச் செய்கிகிறது. இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது.

சாப்பிட வேண்டியவை
 காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. 

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு

 வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை 

நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1  

மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது

சிறப்பு.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. 

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை 

சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் 

பச்சடியாக தயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வரகு,  

கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

பாகற்காயில் இன்சுலின்போன்ற ஒரு பொருள் சுரந்து,

மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு

பிடித்துள்ளனர். 

தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் 

பிழிந்துசாறுஎடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினை குறைத்துக் கொள்ளலாம்.

 
வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் - 3  

நாள்பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக் கட்டுக்குள் 

வைத்திருக்கலாம்.

ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் 

சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது. அதிகப்படியாக 

உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனை அதிகரிக்கின்றது

 
வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதை 

சாப்பிடுவதால் பசி மந்தப் படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை 

மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் 

படுத்தும்.சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை 

குறைத்துக் கொள்ளலாம்.

 
மேலும் கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய்,  

வெண்பூசணி, வெள்ளை முள்ளங்கிபுடலங்காய், பலாக்காய்,காலிபிளவர்,  
முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி,  

சுரைக்காய் போன்றவை சாப்பிடலாம்
 
சர்க்கரை நோயாளிகள், பச்சைக் காய்கறிகளையே முழுவதும் உண்டால் 

மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்

சாப்பிட வேண்டிய பழங்கள் :

ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரிப் பழம்,  
கொய்யாப் பழம்.

அருந்த வேண்டிய பானங்கள் :

சர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை 

சேர்க்காத எலுமிச்சைஜூஸ், தக்காளி சூப், சோடா.

சாப்பிடக்கூடாதவை:
 

வாழைக்காய், சர்க்கரைப் பூசணி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு, காரட்,  
பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, போன்ற பூமிக்கு கீழே 

விளைவதையும்  தவிர்க்கவேண்டும்

சாப்பிடக்கூடாத பழங்கள் 

 பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ 

வகைகள், பெரிய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள்,  

பெரிய ஆப்பிள், பெரிய மாம்பழம், பெரிய கொய்யாப்பழம், சப்போட்டா.,  

சீத்தா  போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.  

அருந்தக் கூடாத பானங்கள் :  

சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் 

ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி,  

கடலை,கேக் முதலியவை.